வேன் மோதி பெண் காயம்

குளத்தூர், பிப். 20: தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த எட்வர்ட் மனைவி பிரேமா(45). எல்ஐசி முகவரான இவர் நேற்று முன்தினம் தருவைகுளத்தில் நடந்த  உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு மொபட்டில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்தார். தருவைகுளம் சமுத்துவபுரம் அடுத்த அந்தோணியார் ஆலயம் அருகே வந்தபோது. எதிரே பனையூரைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் காசி என்பவர் ஓட்டிவந்த வேன், இவரது மொபட் மீது மோதியது. இதில் தவறிவிழுந்து படுகாயமடைந்த பிரேமாவை அப்பகுதியினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  விபத்து குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: