மாசிமாத திருவிழாவில் பன்னிரு கருட சேவை

முஷ்ணம், பிப். 15: முஷ்ணத்தில் மாசிமாதத்தை முன்னிட்டு பன்னிரு கருட சேவை நடந்தது.முஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயிலில் மாசி மாதம் மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு பெருமாள் தங்க கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து கருட சேவை நம்மாழ்வார் கைங்கர்ய சபா சார்பில் பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிந்து ஒவ்வொன்றாக அணி வகுத்தன.முஷ்ணத்தில் மாசிமாதத்தை முன்னிட்டு முதன்முதலாக பன்னிரு கருட சேவை வாகனங்களில் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். இதனை திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் தலைமையில் கோவிந்தராஜபெருமாள் சன்னதி அறங்காவலர் ரெங்காச்சாரியார் முன்னிலையில் முஷ்ணம் தெத்து பிள்ளையார் கோயிலில் இருந்து 25 கருட சேவை சாத்தியன், திருப்பயர், கோவிலூர், ஏரப்பவூர், பெரம்பலூர், மேமாத்தூர், ரெட்டிகுப்பம், கோமங்கலம், இளமங்கலம், கோபாலபுரம், பெ.பூவனூர், வண்ணாங்குடிகாடு, ஆண்டிமடம், அணிகுதிச்சான், வலசக்காடு, நெடுஞ்சேரி, கோ.பவழங்குடி, விருத்தாசலம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கருட சேவை வாகனங்கள் அணிவகுத்தது. இதில் 500 பாகவதர்கள் பங்கேற்ற பஜனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: