நீடாமங்கலம் ஒன்றியத்தில் 367 மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கல்

நீடாமங்கலம்,பிப்.14: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்து மூக்கு கண்ணாடி வழங்கும் விழா மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் ஸ்டான்லி மைக்கேல் உத்தரவுபடி நீடாமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராணிமுத்துலட்சுமி தலைமையில் நடந்தது. நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதணையை வட்டார மருத்துவ உதவியாளர் அண்ணாதுரை கடந்த மாதம் கண் பரிசோதனை செய்து தமிழக முதல்வர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் நீடாமங்கலம் ஒன்றியத்தில் 6014 மாணவ, மாணவிகளுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு 25 நடுநிலைப்பள்ளி,9 உயர்நிலைப்பள்ளி 9 மேல்நிலைப்பள்ளிகளில் 367 இலவச மூக்கு கண்ணாடிகள் முதற்கட்டமாக நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி,ராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்  வட்டார மருத்துவ அலுவலர்கள் தலைமையில்  வழங்கப்பட்டது.

Related Stories: