பொன்னமராவதி,பிப்.5: பொன்னமராவதி மின் வாரிய அலுவலகத்தில் கஜா புயலில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த நவம்பர் 16ம் தேதி வீசிய கஜா புயலில் பொன்னமராவதி பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தது. இந்த மரங்களை உடனே அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் பொன்னமராவதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலக சுற்றுச்சுவரில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அப்புறப் படுத்தபடாமல் காய்ந்து சருகாகி கிடக்கிறது.