கோபி, பிப்.1: கோபி அருகே நேற்று நடந்த கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயில் கோரக்காட்டூரில் சுமார் 150 ஆண்டு பழமையான ஸ்ரீ கரியகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் தேர்த்திருவிழா மற்றும் சுமங்கலி யாக பூஜை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து 28ம் தேதி கிராம சாந்தியும், 29ம் தேதி காலை கொடியேற்றமும், சந்தனகாப்பு அலங்காரமும் இரவு சுமங்கலி யாக பூஜையும் நடந்தது. 30ம் தேதி பொங்கல் நிகழ்ச்சியும், கரும்பு கொண்டு வருதல் மற்றும் குண்டம் திறப்பும் நடந்தது. இதில், பக்தர்களால் காணிக்கையாக கொடுக்கப்பட்ட 10 டன் விறகுகளை கொண்டு தீ மூட்டப்பட்டது. நேற்று காலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து படைக்கல பூஜையும் நடந்தது.