தூத்துக்குடி, ஜன.30: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையரின் கடிதத்தின் படியும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை, பார்) விதிகள் 2003 விதி 12 துணைவிதி (2)ன் படியும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து எப்.எல்.2, மற்றும் எப்.எல்.3 உரிமதலங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.