மன்னார்குடி, ஜன. 22; திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக கூடுதலாக திறந்து உள்ளூர் விவசாயிகளின் நெல்லை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலா ளர், முன்னாள் எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம் மன்னார்குடியில் வெளியிட் டுள்ள அறிக்கை:காவிரி டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்து வருவது வழக்கம். இதற்காக ஒரு குவிண்டால் நெல் பொது ரகத்துக்கு ரூ.1,800, சன்ன ரகத்துக்கு ரூ.1,840 என்று அரசு விலையை நிர்ணயித் துள்ளது,திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் வழக்கம் போல் 420 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப் படும். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் கொள்முதல் நிலையம் திறக்கப் பட்டுள்ளது. திறந்துள்ள கொள்முதல் நிலையத்திலும் பணியாளர்கள் மற்றும் சாக்கு, சணல் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் பணி முறையாக நடை பெறவில்லை.இதனால் உற்பத்தி செய்த நெல்லை உள்ளூர் விவசாயிகள் விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம், தூசி, கருக்காய் உள்ளது போன்ற பல காரணங்களை கூறி கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றனர்.