கொள்ளிடம், ஜன.11: கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே தாண்டவன்குளத்தில் தேமுதிக வின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளார் வாசுதேவன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சத்தியபிரசாத் வரவேற்றார். மாவட்ட மகளிரணி தலைவி கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் மார்ட்டின், செந்தில்குமார், கல்பனா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜலபதி சிறப்புரையாற்றினார்.