சிவகிரி, ஜன.4: சிவகிரி அருகே ஸ்டுடியோ உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த காரவலசை சேர்ந்தவர் குமார் (25). இவர், சேலம் அம்மாபேட்டையில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காரவலசில் உள்ள தனது தாய் லட்சுமியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.