ஆம்பூர் அருகே சிறுமி கடத்தி பலாத்காரம் ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை

ஆம்பூர், டிச.12: ஆம்பூர் அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. ஆம்பூர் அடுத்த மோட்டுகொல்லையை சேர்ந்தவர் அக்பான்(22), ஆட்டோ டிரைவர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமியை திடீரென காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆட்டோ டிரைவரான அக்பான், சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பெங்களூருக்கு கடத்திச்சென்றுள்ளார். பின்னர், அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அக்பான் சிறுமியுடன் ஆம்பூர் வந்தாராம். இதையறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று அக்பானை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: