காஞ்சிபுரம், டிச.11: கண்ணாடிக் கழிவுகளை பொது இடத்தில் கொட்டும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கத் தலைவர் முனுசாமி, கலெக்டர் பொன்னையாவிடம் மனு கொடுத்துள்ளார். மனு விவரம்: மதுராந்தகம் வட்டம், மேலவளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் பாட்டில்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாட்டில் கம்பெனியில் உடைந்த பாட்டில் கண்ணாடித் துகள்களை பொது இடத்தில் கொட்டி விடுகின்றனர். இந்த தனியார் கம்பெனிக்கு மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் வீராணம் ரோட்டில் கிளை நிறுவனம் ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.