ஆலந்தூர், டிச.11: ஆதம்பாக்கத்தில் டிபன் கடையில் அண்ணன், தம்பி சாப்பிட்டதற்கு பணம் கேட்டதில் டிபன் கடைக்காரரை இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கினர். இதில் அண்ணன், தம்பியை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை ஆதம்பாக்கம் வாணுவம்பேட்டையில் டிபன் கடை நடத்தி வருபவர் ஆசிஷ்குமார் (35). நேற்று முன்தினம் இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (18), அவரது தம்பி 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் வந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்ததும் அதற்கான பணத்தை இருவரும் கொடுக்கவில்லை. இதனால் கடையின் உரிமையாளர், சாப்பாட்டுக்குரிய பணத்தை கேட்டுள்ளார். நாங்கள் பணம் எடுத்து வரவில்லை. அருகில் உள்ள ஆட்கள்தான். பிறகு பணம் தருகிறோம், என கூறியுள்ளனர். ஆனால் ஓட்டல் உரிமையாளர் பணத்தை வைத்து விட்டு செல்லுமாறு கண்டிப்புடன் கூறியுள்ளார்.