ஈரோடு, நவ. 30:மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 21 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள் சார்பில் ஜனவரி 8 மற்றும் 9ம்தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஈரோடு பெரியார் மன்றத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநாட்டில் கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் சின்னசாமி பேசினார்.