அய்யம்பாளையம் ஏகேஜிக்கு விரைவில் ரோடு

பட்டிவீரன்பட்டி, நவ. 30:  அய்யம்பாளையம் பேரூராட்சி 11வது வார்டு ஏகேஜி நகரில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நகருக்கு மருதாநதி அணை வரை சாலை வசதி உள்ளது. அங்கிருந்து 1.2 கிமீ தூரத்திற்கு சாலை வசதி இல்லை. இதனால் நடந்து வந்துதான் பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் ஏகேஜி நகருக்கு பேரூராட்சி சார்பில் ரூ.1.30 கோடி செலவில் பாலம் அமைத்து சாலை போடுவதற்காக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த இடத்தை நேற்று கலெக்டர் வினய் ஆய்வு செய்த பின் கூறுகையில், ‘‘இந்நகருக்கு ரோடு அமையும் இடத்தில் பொதுப்பணித்துறை, வனத்துறைக்கு சொந்தமான இடம் வருகிறது. இதற்காக உரிய முறையில் விண்ணப்பித்து விரைவில் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கப்படும்’’ என்றார்.

Related Stories: