முஷ்ணம், நவ. 28: அரியலூர் மாவட்டம் சுண்டகுடி கிராமத்தை சேர்ந்த சசிகுமார்(25) என்பவர் நேற்று காலை முஷ்ணம், பூவராகவ சுவாமி திருக்கோயிலுக்கு பைக்கில் வந்தார். சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து முஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடன் முஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனை தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் சின்னராசு என்கிற ராஜா(21) என்பதையும், சசிகுமார் பைக்கை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.