விருத்தாசலம், அக். 17: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரி திடீர் குப்பத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் குடியிருந்து வந்தனர். அப்போது நடைபெற்ற நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டு இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் 7 ஆண்டுகளாகியும் அவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்காமல் வருவாய் துறையினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர்.இதுகுறித்து அவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களின் காரணமாக அவர்களுக்கு பட்டா வழங்குவதாக திட்டக்குடி வருவாய் துறை நிர்வாகம் தெரிவித்தது.