திருவாரூர், அக். 12: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி திருவாரூரில் நேற்று பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து இந்த பேரணியை துவக்கி வைத்து டிஆர்ஓ சக்திமணி பேசுகையில், இந்தியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 970 பெண் குழந்தைகள் என்று இருந்தநிலை மாறி 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 919 என்ற விதத்தில் உள்ளது. இதுவே தமிழ்நாட்டில் 943 என்ற விகிதத்திலும், திருவாரூர் மாவட்டத்தில் 958 என்ற விகிதத்திலும் உள்ளது. பெண் குழந்தைகள் சுமையாக இருப்பார்கள் என்று கருதுவதன் காரணமாக இது போன்ற விகிதாச்சார நிலை மாறி வருகிறது. பெண் குழந்தைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனவே ஆண், பெண் குழந்தைகள் இருவரும் சமமானவர்கள் என்று கருதி ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளையும் வளர்க்கவேண்டும் என பெற்றோர்களை கேட்டுக்கொள்வதுடன், வரும் காலங்களில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஆயிரம் பெண் குழந்தைகள் என்ற சம நிலை ஏற்பட வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.