உலக முட்டை தினத்தையொட்டி மாணவர்களுக்கு போட்டி

கீழ்வேளூர்,அக்.12: உலக முட்டை தினத்தை முன்னிட்டு  நாகையை அடுத்த ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படையின் சார்பில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி தொடக்க  நிகழ்ச்சிக்கு  தலைமை ஆசிரியர் சிவா தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். போட்டி நடுவர்களாக ஆசிரியைகள் வித்தியா, ஜெய, நித்தியா ஆகியோர் போட்டியை நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் செந்தில் தேர்வு செய்தார். போட்டியில் 3ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு  ஓவிய போட்டியும், 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு கவிதை மற்றும் கோஷம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது.

Related Stories: