செம்பனார்கோவில்,அக்.12: வரும் 29ம் தேதி தரங்கம்பாடிக்கு வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று செம்பனார்கோவில் ஒன்றிய திமுக ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் செம்பனார்கோவில் ஒன்றிய திமுக ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மிசா.மதிவாணன், அவைத்தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அப்துல் மாலிக் வரவேற்றார். நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதாமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக பதவி ஏற்க வைக்க அனைவரும் அயராது உழைக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி அமைத்து கட்சி உறுப்பினர்களை ஒருசேர இணைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டும்.