வேலூர், அக்.12: வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பகுதிகளில் உள்ள திருக்கோயில் திருப்பணி திட்டத்தின் கீழ் 150 கோயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கோயில்களில் விரைவில் திருப்பணிகள் தொடங்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வசதிப்படைத்த திருக்கோயில் நிதியில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பணி மேற்ெகாள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு கோயிலுக்கும் ₹25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2011-12ம் ஆண்டு ஒதுக்கப்படும் நிதி திருப்பணிகள் மேற்கொள்ள போதுமானதாக இல்லை என்பதால் நிதி ₹50 ஆயிரமாக உயர்த்தி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். பின்னர் இந்த நிதி ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டது.