வாலாஜா, அக்.10: வாலாஜாவுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி பைக் திருட்டு நடைபெற்று வந்தது. இதுகுறித்து வாலாஜா ேபாலிசார் வழக்குப்பதிவு செய்து வாலாஜாவை சேர்ந்த சரவணன்(31), மற்றும் விசி மோட்டூரை சேர்ந்த விஜி(27) கைது செய்தனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.