திருச்செந்தூர், செப். 26: திருச்செந்தூர் தலைமை பொது நூலகத்தில் ரயில்வே டி பிரிவுக்கான மாதிரி தேர்வு நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் தலைமை வகித்தார். தமிழக மாணவர் இயக்க மாநில செயலாளர் சிவனேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் மதன்ராஜ் முன்னிலை வகித்தனர். நூலகர் மாதவன் வரவேற்றார். திருச்செந்தூர் கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஷாராணி போட்டித் தேர்வைத் துவக்கிவைத்தார். தேர்வில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ரகுராஜன் பரிசுகள் வழங்கினார். இதில் வக்கீல்கள் பிரகாஷ், ஜெபராஜ், ஐசக், கங்கை அமரன், ராகேஷ் காட்பின், அருண்சேவியர், ராஜீவ்காந்தி, அமைப்பாளர் அஜித்குமார், பொருளாளர் விஜி, தென் மண்டல செயலாளர் அமுதா மெஸ் பட்டு, தொகுதி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இரண்டாம் நிலை நூலகர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.