2 கன்று குட்டிகள் திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடி, மே 9: தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை, சிறுபாடு கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் அசார்(29). இவர் வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 20ம் தேதி இரவு இவரது தொழுவத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், 2 கன்று குட்டிகள் மற்றும் 80 வைக்கோல் கட்டுகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அசார் அளித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை எஸ்ஐ ஞானராஜன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார். இதில் புதுக்கோட்டை கூட்டாம்புளி சாமிகோயில் தெருவை சேர்ந்த சுடலைமணி மகன் சுரேஷ்(எ)பன்னிசுரேஷ்(28), கூட்டாம்புளி ஞானம்நகரை சேர்ந்த முருகேசமுத்து மகன் ரஞ்சித்குமார்(எ)சீனிவாசன்(25) ஆகியோர் சேர்ந்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய சுரேசுக்கு சொந்தமான டெம்போ மற்றும் 40 வைக்கோல் கட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கைதான சுரேஷ் மீது ஏற்கனவே புதுக்கோட்டை போலீசில் 6 வழக்குகளும், ரஞ்சித்குமார் மீது ஒரு வழக்கும் உள்ளன.

The post 2 கன்று குட்டிகள் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: