நாகை,ஆக.14: நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த சிறப்பு மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில், வங்கி கடன், உதவி தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 மனுக்களும், மக்கள் குறைதீர் கூட்டத்தில், புதிய ரேஷன்கார்டு, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 182 மனுக்களும் என மொத்தம் 189 மனுக்கள் பெறப்பட்டன.