பூந்தமல்லி, ஆக.14: சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரோகித்குமார்(19), தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். போரூர் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் ரோகித்குமார் அருகில் சென்று “தம்பி உன்னை சிலர் பின் தொடர்ந்து வருகிறார்கள்” கழுத்தில் அணிந்துள்ள செயினை கழற்றி பையில் வைத்துக்கொண்டு செல்” என்று கூறி உள்ளார்.