செங்கல்பட்டு, ஆக.14: செங்கல்பட்டு அடுத்த வடகால் கிராமத்தில் கள்ளச் சந்தையில் மதுவிற்பனை நடப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு நேற்று முன்தினம் மதியம் தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் வடகால் கிராமத்திற்கு சென்று நோட்டமிட்டனர்.அப்போது, ஒரு வீட்டில் நபர்கள் அடிக்கடி வந்து சென்றதையடுத்து, போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அதில், டாஸ்மாக் மதுக்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.