திட்டக்குடி, ஆக. 13: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆலய திருக்குளத்தின் எல்லைகளை தாசில்தார் தலைமையில் வருவாய் துறை, நிலஅளவை துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். திட்டக்குடியில் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆயத்திற்கு முன் திருக்குளத்தை 31 நபர்கள் ஆக்கிரமித்து வணிக வளாகம், வீடுகள் என கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் திருக்குளத்தை அளவீடு செய்து எல்லை காட்டுவது எனவும், ஆக்கிரமிப்பு இருந்தால் ஆக்கிரமிப்புதாரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றி கொள்வது என முடிவு செய்யப்பட்டது.