பண்ருட்டி, ஆக. 13: பண்ருட்டி அருகே வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது சிறுபாலம் ஒன்று வெள்ளத்தில் சேதமானது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் ஒத்தையடி பாதை வழியாக சென்று வருகின்றனர். பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பிடிஓ கண்டுகொள்வதில்லை. தற்போது மழைக்காலம் வர இருப்பதால் உடைந்த தரைப்பாலத்தை சரிசெய்து கொடுத்தால் மட்டுமே இப்பகுதியில் உள்ள முந்திரி விவசாயிகள், பள்ளி மாணவர்கள் பலன் அடைவர்.