தஞ்சை, ஆக. 13: தஞ்சையில் உள்ள 6 முருகன் கோயில்களில் பாதயாத்திரை குழுவினர் வழிபாடு நடத்தினர். முருகனின் ஆறுபடை வீடுகள் உள்ளதுபோல் தஞ்சை நகரில் உள்ள 6 கோயில்களில் முருகப்பெருமான், ஆறுபடை வீடுகளாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதனால் தஞ்சையில் ஆண்டுதோறும் வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை குழுவினரின் வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தஞ்சை பெரிய கோயிலில் இருந்து 40து ஆண்டாக வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை குழுவினர் 6 கோயில்களுக்கும் பாதயாத்திரையாக புறப்பட்டனர். அதன்படி முதலில் இந்த பாதயாத்திரை குழுவினர் மேலஅலங்கத்தில் உள்ள முருகன் கோயிலுக்கு (திருப்பரங்குன்றம்) சென்றனர்.