குளத்தூர், ஆக.13: குளத்தூர் அருகே கீழவைப்பார் தூயமோட்ச அலங்கார அன்னை ஆலயதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.குளத்தூர் அருகே கீழவைப்பார் மீனவ கிராமத்தில் உள்ள தூய மோட்ச அலங்கார அன்னை ஆலய திருவிழா வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் 10நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறும். வழக்கம்போல் இந்த வருட திருவிழாவை முன்னிட்டு தூய மோட்ச அலங்கார அன்னையின் ஆபரணம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர்வாதத்துடன்கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கியது.