சமூக ஆர்வலர்கள் பாராட்டு தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் எரிபொருள் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜூன்21: பெட்ரோல், டீசல், சிலிண்டர் மீதான விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் நூதன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.மாவட்டச் செயலாளர் பாரதி தலைமை வகித்தார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பெட்ரோல், டீசல், சிலிண்டர் மீதான விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது மாட்டு வண்டிகளை கட்டிக்கொண்டு அதன் மேல் சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து மாட்டு வண்டி ஓட்டுவது போல் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநிலக்குழு உறுப்பினர்கள் திருஞானம், பக்கிரிசாமி, இடைநிலை குழு செயலாளர்கள் பூதலூர் ராமச்சந்திரன், பேராவூரணி பன்னீர்செல்வம், சேதுபாவாசத்திரம் சின்னதம்பி, பட்டுக்கோட்டை மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சை மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Related Stories: