தமிழ் அறிஞர்களுக்கு இலவச பஸ் பாஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் அறிஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று அன்னை தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தமிழ் பணி செய்து வரும் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க கலெக்டர் ஏற்பாடு செய்தார். அதன் அடிப்படையில், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 20 பேருக்கு இலவச பஸ் பாஸ் காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழ் அறிஞர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

Related Stories: