ஸ்ரீபெரும்புதூரில் திமுக ஆலோசனை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்:  காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். பொதுகுழு உறுப்பினர் கணேஷ்பாபு, ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய நிர்வாகிகள் சுபரஞ்சனி கன்னியப்பன், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் உமாகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

இக்கூட்டத்தில். மாவட்ட நிர்வாகிகள் பொடவூர் ரவி, செந்தில்தேவராஜ், குன்னம் முருகன், ஜார்ஜ், சந்தவேலூர் சத்யா, ஒன்றிய அமைப்பாளர்கள் போஸ்கோ, ஆதித்ய முருகன், கிளை செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள், பாக முகவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணி, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தபட்டது.

Related Stories: