ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். பொதுகுழு உறுப்பினர் கணேஷ்பாபு, ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய நிர்வாகிகள் சுபரஞ்சனி கன்னியப்பன், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் உமாகாந்த் கலந்து கொண்டு பேசினார்.