மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ல் துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா, ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். ஏப். 30ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 1ம் தேதி திக்கு விஜயம், மே 2ம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

மே 3ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து 4ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து அழகர் கோயில் சித்திரை திருவிழாவும் தொடங்குகிறது.முக்கிய நிகழ்வாக மே 4ம் தேதி மதுரை வரும் அழகரை மக்கள் எதிர் கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சியும், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்கிறது.

Related Stories: