மதுரை : மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைக்கும் முகாம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமை வகிக்க, கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், உதவி கமிஷனர் காளிமுத்தன் முன்னிலை வகித்தனர்.இம்முகாமில் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், ஐயர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், கற்பக நகர், கோமதிபுரம், ஆத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்து தங்கள் பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி மற்றும் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டி மனுக்களாக அளித்தனர்.