சோழவரம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

புழல்: சோழவரம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. சோழவரம் ஊராட்சி கூட்ட அரங்கில்,  ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைப்பது, பொதுமக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய பொது மேலாளர் லோகதாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊர் நல அலுவலர் மீராகண்ணன் நன்றி உரையாற்றினார்.

Related Stories: