புழல்: சோழவரம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. சோழவரம் ஊராட்சி கூட்ட அரங்கில், ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.