ஈரோடு: காலை சிற்றுண்டி திட்டம் ஈரோடு மாநகராட்சியில் கூடுதலாக 32 பள்ளிகளில் இன்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே ஈரோடு மாநகராட்சியில் 28 பள்ளிகளில் 2,649 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வந்தது. இன்று முதல் கூடுதலாக 32 பள்ளிகளில் 5,793 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 96 பள்ளிகளைச் சேர்ந்த 9,180 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.