லாகூர்: பாகிஸ்தான் அரசியலில் இம்ரான்கான் இருக்க வேண்டும். அல்லது நாங்கள் இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா தெரிவித்தார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதில் இருந்து அங்கு மிகப்பெரிய அளவில் அரசியல் பிரச்னை உருவாகி உள்ளது. பாகிஸ்தான் அரசுக்கும், இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சிக்கும் இம்ரான்கான் கட்சிக்கும் இடையே தான் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி தனியார் டிவி சேனலில் நவாஸ் கட்சியை சேர்ந்தவரும், உள்துறை அமைச்சருமான ரானா சனாவுல்லா கூறியதாவது: