செங்கல்பட்டு: சுற்றுலாத்துறை சார்பாக உண்டு உறைவிட முகாம், சாகச சுற்றுலா, கேரவன் பார்க் சுற்றுலா நடத்துபவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தமிழக சுற்றுலாத்துறை சார்பாக உண்டு உறைவிடம் முகாம் நடத்துபவர்கள், சாகச சுற்றுலா நடத்துபவர்கள், முகாம் நடத்துபவர்கள், கேரவன் பார்க், சுற்றுலா நடத்துபவர் போன்ற சுற்றுலா முகவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. முகவர்கள் பிரிவில் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவு செய்யாமல் சில நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.