சேலம்: கெலமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 40 வயது கூலித்தொழிலாளி மீது போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அப்பணி நடக்கும் ஒரு மாத காலத்திற்கு சில குறிப்பிட்ட ரயில்களின் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வகையில், கோவை, ஈரோடு, சேலம் வழியே திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கத்தில் இருமார்க்கத்திலும் ஒரு பகுதியை ரத்து செய்து அறிவித்துள்ளனர்.