திண்டுக்கல்: குஜராத்தில் நடைபெறும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருமாறு திண்டுக்கல் மக்களுக்கு குஜராத் அமைச்சர் குபேர்பாய் திண்டோர் அழைப்பு விடுத்தார்.
குஜராத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏப்.17ம் தேதி முதல் ஏப்.30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள சவுராஷ்டிரா மக்களுக்கு அழைப்பு விடுக்க குஜராத் அமைச்சர்கள் 8 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள சவுராஷ்டிரா மக்களை அழைப்பு விடுப்பதற்காக குஜராத் அமைச்சர் டாக்டர் குபேர்பாய் திண்டோர், பழங்குடியினர் வளர்ச்சி துறை செயலாளர் டாக்டர் முரளி கிருஷ்ணா நேற்று திண்டுக்கல் வந்திருந்தனர். இவர்களை சவுராஷ்டிரா சபை தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். பின்னர் திண்டுக்கல் நாகல் நகரில் சவுராஷ்டிரா சபை அழைப்பிதழ் கூட்டம் நடைபெற்றது.