செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் பங்கேற்றார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 274 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாகிதா பர்வீன், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.