புதுடெல்லி: நேரு குடும்ப பெயர் தொடர்பாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் முதல்கட்ட கூட்டத் தொடரின் போது, கடந்த மாதம் 9ம் தேதி மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ‘காந்தி குடும்பத்தினர் ஏன் நேருவின் பெயரை குடும்ப பெயராக வைக்கவில்லை’ என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.