கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் வாழும் சோலை மந்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதிக்குள் கடந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் தொடக்கத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் மீண்டும் பேரிஜம் வனப்பகுதி செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இவ்வனப்பகுதியில் சோலை மந்திகள் அதிகம் காணப்படும். தற்போது இவைளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.