ஈரோடு: பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பசும்பாலுக்கான கொள்முதல் விலையை 35 ரூபாயில் இருந்து 42 ரூபாயாகவும், எருமை பால் கொள்முதல் விலையை 44 ரூபாயில் இருந்து 51 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து தமிழ்நாடு பால் நல உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று முதல் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.