பெரியார் பல்கலை பதிவாளரை கைது செய்ய சென்ற அமீனா: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடி வேலை

சேலம்: சேலம் ரெட்டிப்பட்டி நகரமலை அடிவாரத்தை சேர்ந்தவர் தெய்வராணி (53). இவர் 1998ல் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு பிரிவில் இளநிலை உதவியாளராக சேர்ந்தார். ஆனால் அவர் 2002ல் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து அவர் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவரை பணியில் சேர்க்க கடந்த 2013ல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ஆனால் அவருக்கு வேலை கொடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மீண்டும் நீதிமன்றத்தை தெய்வராணி நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அமீனா ராஜா, வாரன்டுடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். இதையடுத்து தெய்வராணிக்கு உடனடியாக பணி ஆணையை பதிவாளர் வழங்க அவரும் வேலையில் சேர்ந்து கொண்டார். 10 ஆண்டுகளுக்கான சம்பளமும் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories: