கடலூர்: வேப்பூர் அருகே அங்காளம்மன் கோயிலில் பக்தர் தலையில் நெருப்பு வைத்து பொங்கலிடும் வினோத விழா நடந்தது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மாசி மாதம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். தற்போது 5ம் நாள் திருவிழாவான நேற்று சுவாமி வீதியுலா வரும்போது, பக்தர் ஒருவர் தலையில் துணி போட்டு அதன்மீது சக்கர வடிவில் சுற்றிய துணியை மண்ணெண்ணெய்யில் நனைத்து அந்த துணியை பக்தர் தலையில் வைத்து நெருப்பு எரிய விடுகின்றனர்.
