செய்யாறு: செய்யாறு அருகே கொட்டகைக்குள் நள்ளிரவில் புகுந்த வெறிநாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் 15 ஆடுகள் பலியானது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன்(70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் அருகே உள்ள அருகாவூர் கிராமத்தை சேர்ந்த இளையான் என்பவரின் செம்மறி ஆடுகளை கூலிக்கு மேய்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஜானகிராமன் வழக்கம்போல் செம்மறி ஆடுகளை மேய்த்துவிட்டு தனது வீட்டின் பின்புறமுள்ள கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார்.