ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் தமிழக டிஜிபி நள்ளிரவு திடீர் ஆய்வு

ஈரோடு: ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேற்று நள்ளிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மற்றும் கூட்டங்களை முடித்துக் கொண்டு நேற்றிரவு 11 மணியளவில் திடீரென ஈரோடு வந்தார்.

அப்போது, அவர் திடீரென ஈரோடு டவுன் காவல் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதில், காவல் நிலைய பதிவேடுகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்றும் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து, பதிவேடுகளை முறையாக பராமரித்து வருவதையும், காவல் நிலையத்தின் செயல்பாடு குறித்தும் பாராட்டி வெகுமதியளித்தார். மேலும், மாவட்ட எஸ்.பி. சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

Related Stories: