ராமேஸ்வரம்: 8 ஆண்டுகளில் ரூ.800 வரை சமையல் காஸ் விலை உயர்ந்ததைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேஸ்வரத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பில், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து, நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா குழு உறுப்பினர் சகாயம் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘கடந்த 8 ஆண்டுகளில் ரூ.800 வரை சமையல் காஸ் விலை உயர்ந்து கழுத்தை நெரிக்கிறது என்று கோஷமிட்டனர்.